Wednesday, December 16, 2015

தினம் ஒரு ஈழத்து தமிழ்ச்சொல்

இன்று மூன்று சொற்கள் தேர்வு செய்திருக்கிறேன்.
மூன்று சொற்களும் ஒரே மாதிரியான சொல்லைக் கொண்டு தொடங்குபவையாக இருந்தாலும் வென்வேறு வகையான பயன்பாடுகளுக்கு உபயோகிக்கப்படுவனவாகும்.

1) அரிதட்டு /மாவரி/அரிக்கன் தட்டு / அத்திமடக்கு (மட்டக்களப்பு தமிழ்) - சல்லடை

அரிதட்டு அல்லது மாவரி அல்லது அரிக்கன் தட்டு என்பது மாவில் குறுணிய சீரான தூள்களை பெரிய கட்டிகளில் இருந்து வேறுபடுத்த பயன்படும் ஒரு சமையல் உபகரணம்.இதில் மா, ரவை, தூள், பொடி வகைகள் அரிக்கப்படுவதுண்டு.



2) அரிக்கன் சட்டி - அரிசி களைந்து கல், நெல் அகற்றி அரித்தெடுக்க உபயோகிக்கப்படும் மண் அல்லது ஈயத்தாலான பாத்திரம்.

3) அரிக்கன் லாம்பு - மண்ணென்ணெயில் எரியும் விளக்கு ;ஹரிக்கன் காற்றில் கூட இந்த விளக்கு அணையாது என்ற அர்த்தத்தில் இந்த விளக்குக்கு ஹரிக்கேன் இலாம்பு என்று பெயர் வைத்தார்களாம். ஹரிக்கேன் அரிக்கனாக மருவி விட்டது. 



ஈழத்தில் விளக்கை (இ)லாம்பு என்று சொல்வார்கள். லாம்பு என்ற வார்த்தையும் அன்னிய மொழியிலிருந்து தமிழுக்குள் வந்த வார்த்தையே .

உதாரணம்:
1) மாவரிக்க நல்லதா அரிதட்டு ஒண்டு வாங்க வேணும்.
2) அரிக்கன் சட்டியில அரிசியை அரிச்சால் அரிசியை விட கல்லு தான் கனக்க வருது.
3) இருட்டப் போகுது, அந்த அரிக்கன் லாம்பை கொளுத்தி வையன்.

No comments:

Post a Comment