Wednesday, May 28, 2014

அகதி

தாயகத்தின் மாட்சிமைகள் தரைமட்டமாக்கப்பட்ட
சில கதைகள் சொன்ன பின்
அவனிடம் பிச்சை வாங்க
சில விண்ணப்பங்கள் நிரப்பி
முத்திரை குற்றப்பட்டு வெளியேறினேன்...
உடுத்தியிருந்தும் நிர்வாணமாய் குறுகியது
எங்கோ ஒரு மூலையில் மூளையில்
உணர்வு..


வெளியே....
இன்னொரு பெருநகர் வீதியின்
இரு புறமான பாதையில்
எனக்கென்ற இலக்கு தெரியாத திகில்
அப்பி போயிருந்தது..
போவதற்கு எனக்கு இடம் எதுவுமில்லை...

முகவரிகள் தெரியாத
பரிச்சயங்கள் இல்லாத ....
வாசல் ஒன்றில் கழற்றிவிடப்பட்ட
காதறுந்த செருப்பின் அந்நியமாய்
உணர்வு கசங்கிய போது தான்
அறிவு சொன்னது
அங்கே வீழ்ந்த குண்டுகளில்
ஒன்றாவது என்னைக் கொன்றிருக்கலாமென....

No comments:

Post a Comment