Saturday, May 3, 2014

 அனாதைகள்
 
-நாங்கள்
அகதிகளாக்கும் என்று
நினைத்திருந்தோம்...
இப்போது தான் புரிகிறது
நாங்கள்
அனாதைகளாகியிருக்கிறோமென்று..!
முகவரிகளற்ற,
 அடையாளங்கள் பறிக்கப்பட்ட
முகமிழந்த மனிதர்கள் நாங்கள்.
உரிமையின் தேடல் போரில்
எமக்கான தண்டணையாக
உணர்வுகள்
வன்மையாக பொசுக்கப்பட்டு
இருள் அடர் காடுகளில்
குருடர்களாக விடப்பட்டோம்..

மிச்சமிருந்த நிலங்கள் பறிபோக
சொச்சமாயிருந்த உறவுகளையும்,
உன்னதமான தலைவனையும்
பறிகொடுத்த
வரலாற்றின் எச்சங்கள் நாங்கள்.

தறித்து வீழ்த்தப்படும்  ஒவ்வொரு பொழுதும்
விதைத்த சிறு பருப்பின் முளையாய்
திரும்ப திரும்ப எழுந்து நிற்க பழகினோம்...
என்பதால்
இப்போது எங்கள் தலைகள்
துடிக்க துடிக்க துண்டாடப்படுவது
சகசமாகிப் போனது .....

துண்டிக்கப்பட்ட தலைகள்
கீழே விழும் கணங்களில் தான்
மங்கிக் கொண்டிருக்கும்
எம் புலன்கள் உணர்கின்றன....
துரோகிகளிடமும்,
எதிரிகளிடமும்
எம் சந்ததிகளை அனாதைகளாக
விட்டு விட்டு இறந்து போகிறோமென......


No comments:

Post a Comment