Tuesday, February 11, 2014

ஒப்புக்கு சொல்லப் படும் உப்பு சப்பில்லாத தத்துவங்கள்


 ஒப்புக்கு சொல்லப் படும் உப்பு சப்பில்லாத தத்துவங்கள்


இது வரை நடந்ததை யோசிப்பதை விட இனி எப்படி நடப்பது என்பதை யோசிப்பவர்களே வாழத் தெரிந்தவர்கள்!

இப்படி ஒரு தத்துவத்தை ஒரு நண்பரின் பதிவின் பின்னூட்டத்தில் படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

மிக சுலபமாக தத்துவங்கள் எழுதப்படுகின்றன. ஆனால் அவற்றை வழிகாட்டியாக எடுத்துக் கொண்டு வாழத் தலைப்படுபவர்களுக்கு தான் தெரியும் அவை வெறும் ஜிகினா பூசப்பட்ட வார்த்தைகள் என்று.

நடந்தவற்றை யோசிப்பதை விட்டுவிட்டு நடக்கப் போவதை சிந்திக்க சொன்னால் எதையென்று சிந்திக்க முடியும்?? குடும்பமே நிர்மூலமாக்கப்பட்ட சிறுவனிடம் போய் இதை சொல்லிப் பாருங்கள்! இராணுவத்தினரால் வன்கொடுமை செய்யப்பட்டு , குற்றுயிரும் குலையுயிருமாய் கிடக்கும் ஒரு பெண்ணிடம் போய் சொல்லிப் பாருங்கள்! உயிரோடு கருகிய சொந்தங்களின் பிணக்குவியலில் உட்கார்ந்திருக்கும் ஒரு அனாதை அகதியிடம் போய் சொல்லிப் பாருங்கள்..!!

ஒவ்வொருவருவம் அடுத்து வரும் நாட்களை கடத்தப் போகிறார்கள் தான். அதற்காக சுவாசிக்கப் போகிறார்கள் தான். சுவாசிப்புக்காக சாப்பிடப் போகிறார்கள் தான். சாப்பாட்டுக்காக உழைக்கவோ அல்லது அகதிப் பிச்சையோ வாங்கப் போகிறார்கள் தான். ஆனால் அந்த நாட்கடத்தல்களில் என்ன விடிவு வரப் போகிறதென்றோ அல்லது நான் என்ன சாதிக்கப் போகிறேன் என்றோ எதிர்பார்ப்போ, திட்டமிடலோ எதுவும் இருக்கப் போவதில்லை. சூனியமாக்கப்பட்ட ஒரு வரலாற்றின் அடையாளங்களாக இருக்கும் வரை இருந்துவிட்டுப் போகப் போகிறோம். எங்களிடம் வந்து தத்துவப் பதாகைகளை காட்டாதீர்கள்!!

1 comment:

  1. ஒப்புக்கு எதையும் சொல்வதாக இல்லை.

    ReplyDelete